செவ்வாய், 25 ஜனவரி, 2011

தமிழக மீனவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்?

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது எல்லோர்ருக்கும் நன்கு அறிந்த ஒரு விடயமே.  ஒவ்வொரு முறையும் இதற்க்கு இந்திய அரசு எதாவது ஒரு காரணங்களையும் அல்லது விளக்கங்களையும் அளிக்கும். அந்த விளக்கங்களை அல்லது காரணங்களை ஒரு சாதாரண குடிமகனான
என்னால் என்ன புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் அலசுவதுதான் இந்த பதிவின் நோக்கம்.

இந்திய கூறும் காரணங்களை கிழே  பட்டியலிட்டு மற்றும் எனது புரிதலை ஆராய்ந்து உள்ளேன்.

1. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் அதனால் தான்
இலங்கை சுட்டு தள்ளுகிறது.

   - எல்லை தாண்டி சென்றால் சுட வேண்டும் என்று எந்த நாடு அல்லது சர்வதேச சட்டத்திலும்  கிடையாது. இதனை நம்
 எதிரி நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட செய்வதில்லை.  ஆனால்  நட்பு நாடு என்று சொல்லும் இலங்கை  ஏன் தமிழக
 மீனவர்களை தொடர்ந்து கொன்று வருகிறது?

2. இலங்கை அரசு சுடவில்லை என மறுக்கிறது.

  - இதனை எங்களிடம் சொன்னால் நாங்கள் என்ன செய்வது, இந்திய அரசான நீங்கள் தானே யார் செய்தது என்று கண்டுபிடித்து, தக்க தண்டனை  தர வேண்டும்.

3. இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் அல்லது கவலையை தெரிவித்து உள்ளோம்.

  - இதை தானே பல ஆண்டுகளாக செய்து கொண்டு இருகின்றிர்கள்.  பாம்பே தாஜ் ஹோட்டல் தாக்குதல் மற்றும் பல தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சர்வதேச சமுதாயத்திடம் தீவிரவாத நாடு என்று புலம்பி குற்றம் சாற்றி புலம்புகிரிகளே.
பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டு விட்டு விஷத்தை சாதரணமாக விட வேண்டியதுதானே.

4. இந்த மாதிரி சம்பவங்கள் கவலை அளிப்பதாக  உள்ளது.

   - மேற் கூறிய காரணங்களை பார்க்கும் பொழுது உங்கள் கவலை போலியனதகவே தெரிகிறது.

இந்திய அரசு தமிழக அரசியல்வாதிகளை பதவி மற்றும் பணத்தை காட்டி
அமுக்கி வைக்கலாம். ஆனால் வருங்கால இளம் சமுதாயத்தை ஏமாற்ற முடியாது. இது போன்ற செயல் வல்லரசு கனவுக்கு பாதகமாகவே முடியும்.

இந்திய  அரசு சிந்திக்குமா? வலிமையான பாரதத்தை உருவாக்குமா?